|
முடி கொட்டினால் கவலை வேண்டாம்.
B.S.
ஆயிஷா ரிழ்வானா ஆலிமா முஅஸ்கரிய்யா
தையல் பிரிவு ஆசிரியை: முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபி கல்லூரி
1.
வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஊற வைத்து முளைக்கட்டியவுடன் காய
வைத்து பொடி செய்து தினமும் கால் தேக்கரண்டி அளவு எடுத்து மோரில்
கலந்து அருந்தி வந்தால் முடி கொட்டுவதை நிறுத்தி வளரச் செய்யலாம்.
2.
மருதாணி
முடிக்கு மிக நல்ல வளப்பைத் தரும். சோறு வடித்த கஞ்சி கலந்து
தேய்த்துக் குளித்தால் முடி பளப்பளப்பாகவும்,
உறுதியாகவும் இருக்கும்.
3.
சோற்றுக்
கற்றாழையின் சோற்றுப் பகுதியை தேய்த்து குளிப்பதும் நல்ல குளுமையைத்
தரும். இவை பொடுகை நீக்க நல்ல மருந்து.
4.
இரவில்
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அரைத்து தலையில்
தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் கண்ணுக்கு குளிர்ச்சியைத்
தரும்.
5.
கிஸ்மிஸ்
பழம் தினமும் 4
என்ற அளவில்
சாப்பிட்டு வந்தால் முடியின் செழுமைக்கு மிக நல்லது.
6.
கறிவேப்பிலை அரைத்து தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் நரைமுடி மாற
ஆரம்பிக்கும்.
7.
கரிசலாங்கண்ணி வழுக்கைத் தலையைக் கூட முடி வளரச் செய்யும் ஆற்றல்
கொண்டது. மேலும் கரிசலாங்கண்ணியை அரைத்து வழுக்கை தலையில் தேய்த்து
வந்தால் ஓரிரு மாதங்களில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
8.
வாரம் ஒரு
முறையாவது சீயக்காய் தேய்த்து குளியுங்கள். முடி கண்டிப்பாக வளரும்.
|